முதல்வரும் கண்டுக்கவில்லை கவர்னரும் கைவிட்டார்:- ஆர்பாட்டமோ ஆர்பாட்டம்!

முதல்வரும் கண்டுக்கவில்லை கவர்னரும் கைவிட்டார்:- ஆர்பாட்டமோ ஆர்பாட்டம்!

 ஜி.கே.சேகரன்,

  முன்னாள் படைவீரர்களுக்கு மருத்துவமனை மற்றும் கேண்டீனுக்கு செல்லும் சாலையை அமைத்துதர கோரியும் வேலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க கோரியும் -« வலூரில் ஜவான் பவன் அமைக்க வேண்டும் வீட்டு வரி சுங்கவரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காட்பாடியில் முன்னாள் படைவீரர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

  வேலூர்மாவட்டம், காட்பாடியில், சித்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

 சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் ஒருங்கிணைப்பாளர் ஜம்புலிங்கம் மற்றும் ஏழுமலை உள்ளிட்ட திரளான முன்னாள் படைவீரர்கள் பங்கேற்று முன்னாள் ராணுவ வீரர்களின் மருத்துவமனை மற்றும் கேண்டீன் செல்லும் வழிக்கு சாலை அமைக்க வேண்டும் வேலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை அமைக்க வேண்டும் வேலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் நலனை கருதி ஜவான் பவன் அமைத்து தர வேண்டும் முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி .சுங்கவரி ஆகியவைகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் வேலூர் அருகாமையில் முன்னாள் படைவீரர்களுக்கு இசி.எச். எம் பேனல்டு மருத்துவமனை அமைக்க வேண்டும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

  மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள 75 ஆயிரம் முன்னாள் படைவீரர்கள் பலமுறை தமிழக முதல்வர் கவர்னர் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்தும் மனு அளித்தும் கோரிக்கைகள் நிறைவேற்றாததால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.