கலெக்டர் ஆபிசை நோக்கி தொடரும் குறைபாடுகள்!

கு.அசோக்,
மாற்று திறனாளிகள் மரியாதையாக நடத்த படவில்லை எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அரங்கில் வாரம் செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு முகம் நடைபெறுவது உண்டு.
இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் கூடுதல் அருகில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
அப்போது கை கால் முறிவு மருத்துவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சதவீத சான்று அட்டையை வழங்க பணம் கேட்பதாக குற்றம் சாட்டினர்.
அது மட்டுமின்றி 40 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளின் சான்று இருந்தால் மட்டுமே அரசு சலுகைகள் கிடைக்கும்.
ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவர்கள் முறையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சான்று அட்டையை வழங்குவதாக கூறினர்.
மேலும், மருத்துவர்கள் தங்களுடைய சொந்த கிளினிக்கு வரச்சொல்லி பணத்தை பெறுவதாகவும் குறை கூறினர்.
அது மட்டுமன்றி அதிகாரிகள் அநாகரிகமாக பேசுவது மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமர நாற்காலிகள் இல்லை, தண்ணீர்கூட தருவதில்லை கீழே அமரச் சொல்கிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இச் சம்பவம் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் மாற்று திறனாளிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.