நாளை கூடும் சட்டமன்றம்!

நாளை கூடும் சட்டமன்றம்!

  ஆர்.ராஜேஷ்குமார்,

 தமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறாது.

கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  மறு தினமே வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

 இந்நிலையில், இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

 அப்படியிருக்க துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது.

   முதல் நாளான நாளை (புதன்கிழமை) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுவார்கள். இறுதியில் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசுவார்.

   விவாதங்கள் ஏற்பட்டால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிப்பார். அதே போல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் குறுக்கிட்டு பேசுவார்.

  துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் தினமும் விவாதம் நடைபெறும்.

   இந்நிலையில், சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது..