ஒரு செங்கலை கூட கர்நாடக அரசு நட முடியாது! அடித்துச்சொல்லும் அமைச்சர் துரைமுருகன்!

ஒரு செங்கலை கூட கர்நாடக அரசு நட முடியாது! அடித்துச்சொல்லும் அமைச்சர் துரைமுருகன்!

  ம.பா.கெஜராஜ்,

  மேகதாதுவில்  ஒரு செங்கலை கூட கர்நாடக அரசு நட முடியாது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் தெரிவிதார்.

  செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்  “சுப்ரீம் கோர்ட் மற்றும் காவிரி தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவுகளின் படி தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், காவிரி ஆற்றில் அணை உள்ளிட்ட எதுவும் கட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் இசைவு இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாதுவில் ஒரு செங்கலை கூட நட முடியாது என்பது கர்நாடக அரசுக்கும் நன்றாக தெரியும்.

  சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தான் இறுதியானது. அதற்கு கீழ்படிந்து நடப்பது தான் இந்திய ஜனநாயகம். ஒரு மாநிலமே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று சொன்னால், பிறகு இந்தியாவில் ஒருமைப்பாடு எங்கே ஏற்படப்போகிறது? மத்திய அரசு அவ்வளவு சுலபமாக சாய்ந்துவிடாது என்று நான் கருதுகிறேன்.” என்று சொன்னார்.