முறையற்ற வீட்டு மனைகளை வரன்படுத்த மீண்டும் அவகாசம் கொடுத்த தமிழக அரசு!

ஜி.சசிகுமார்,
தமிழகம் முழுவதிலும் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை வரன்முறைப்படுத்த அடுத்த ஆண்டு பிப்.29-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு வீட்டுவசதித் துறை செயலர் சி.சமயமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பெபில் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதியப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப் படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
இவற்றில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 2024பிப்.29-ம் தேதி வரை விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு செய்து, கடந்த செப்.4-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஷ்ஷ்ஷ்.௴ஸீறீணீஹ்ஷீ௵௴க்ஷீமீரீ.வீஸீ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவுசெய்யலாம். எஞ்சிய அனுமதியற்றமனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ளக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பைதவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இதனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் மீண்டும் துளிர்த்தெழுமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.