கலெக்டர் ஆபிசில் அமர்ந்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தலாமா? சாமன்யர்கள் கேள்வி!

ஜி.கே.சேகரன்,
வேலூர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக மூன்றாம் கட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது அலுவல் பணிகளை புறக்கணித்தனர். இந்நிலையில் கலெக்டர் ஆபிசில் அமர்ந்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தலாமா என்று சாமன்ய மக்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக பணிபுறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் இரண்டாவது நாளாக பணிபுறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பணியை புறக்கணித்து ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாண்டுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் பெயர் மாற்ற விதி திருத்த ஆணையை உடனே வழங்க வேண்டும் கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பை 5 சதவிகிதமாக குறைத்துள்ளதை மீண்டும் 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.
பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனே வழங்க வேண்டும் மேலும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறது அதற்கு தேவையான பணியிடங்களை உருவாக்க வேண்டும் போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஓய்வு அறை அருகே தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக மூன்றாம் கட்ட போராட்டம் நடைபெற்றது.
வருவாய் துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் அவலம் பணியிடங்களை பாதுகாத்திட கோரிக்கைகளை வென்றிட அனைத்து பணிகளையும் புறக்கணித்து நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை அவர்கள் கையில் எடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் இளநிலை முதுநிலை ஒருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும் மூன்று ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் வருவாய் துறை சார்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்
அரசை எதிர்த்து போராடும் அரசு ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தலாமா என்று சாமன்யர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.
இந்த கேள்விக்கு பதில் சொல்லிவிடுவார்களா?