வரும் திங்கள் செவ்வாய் ஆபிசுக்கு வரலைன்னா சம்பளம் கட்! அரசு ஊழியர்களுக்கு லகான்!

ஆ.ராஜேஷ்குமார்,
வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் ஆபிசுக்கு வரலைன்னா சம்பளம் கட் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துதல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், மத்திய அரசு ஊழியர்கள் வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்துக்கு தி.மு.க., இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அப்படியிருக்க வரும் 28 மற்றும் 29 ஆம் தேதி பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவித்து, அனைத்து துறை செயலாளர்களுக்கும் அவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பணிக்கு வந்தோர், வராதோர் பட்டியலை துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதே போல் போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறையும் அறிவிப்பு செய்துள்ளது.
அதில், மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என அறிவித்துள்ளது.