ஏ.ஜி.பாபு, ஐ.பி.எஸ். உட்பட 23 காவல் துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது!

ஏ.ஜி.பாபு, ஐ.பி.எஸ். உட்பட 23  காவல் துறை அதிகாரிகளுக்கு  ஜனாதிபதி விருது!

 ம.பா.கெஜராஜ்,

  நாளை 78 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை பாரத நாடு கொண்டாடுகிறது. பிரதர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  மிகச் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளான ஏ.ஜி.பாபு. ஐ.ஜி மற்றும் கண்ணன் ஐ.ஜி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

   மேலும்  ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தில் 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காவல் ஆணையர் பிரவீன் குமார், டிஎஸ்பி மனோகரன், டிஎஸ்பி டில்லி பாபு, டிஎஸ்பி சங்கு, ஏஎஸ்பி ஸ்டீபன், காவல் ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதே போல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டேலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் அலுவலகங்கள் வர்த்தக நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றி பலரும் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் வேலூரில் புகழ் பெற்ற ஏ.எஸ்.ஏ.மருத்துவமனை தொடர்புடைய இடங்களில் அதன் நிறுவனர் டாக்டர் எம்.சக்கரபாணி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்.