பொங்கல் வைக்க சிறந்த நேரம்! ஆற்காடு பஞ்சாங்க தகவல்!!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி பல்வேறு நிகழ்வுகள் பிசிறாமல் நடப்பதை அறிவோம்.
இந்நிலையில் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலேயோ பிறக்கும் தை மாதம், இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை மாலை 5.20 மணிக்குத்தான் பிறப்பதாகவும், வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் பொங்கல் வைக்க உகந்த நேரம் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
இதை ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தை கணிதர் சுந்தரராஜன் ஐயர் கணித்து, இந்த பிலவ ஆண்டு தைத்திருநாளில் பொங்கல் வைக்கும் நேரம் குறித்து மேற்படி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
வாக்கிய ரீதியாக அகஸ் கணக்கை வைத்துதான் இது கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீட்டின் படி ஒரு நாளைக்கு 60 நாழிகை இரவு பகலாக 30 நாழிகையாக பிரிக்கப்படுகிறது. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஒரு நாழிகையாகவும் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை ஒரு நாழிகையாகவும் உள்ளது.
அதன்படி சூரிய பகவான் தை 1-ந்தேதி மாலை 5.20 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
அப்போதுதான் மகா சங்கராந்தி புரு?ஷர் பிறக்கிறார். உத்தராயண புண்ணிய காலமும் உதயமாகிறது.
இந்த ஆண்டு தை 1-ந் தேதி வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் மீன லக்னத்தில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் புதுப்பானையில் பொங்கல் வைக்கலாம். பொங்கல் வைக்க சிறந்த நேரமாக இது கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு உத்தராயண புண்ணிய காலம் தை 1-ந்தேதி அன்று மாலையில் அதாவது பின்னோக்கி பிறப்பதால் நல்ல பலன்கள் குறைவாகவே கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இதெல்லாம் ஆற்காடு பஞ்சாகத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டதாகும்.