நறுவீ மருத்துவமனையில் நிறுவனர் தின விழா கொண்டாட்டம்!

நறுவீ மருத்துவமனையில் நிறுவனர் தின விழா கொண்டாட்டம்!

ஜோ.மோசஸ்,

  வேலூர் நறுவீ மருத்துவமனையில் நிறுவனர் தின விழா கொண்டாட்டங்கள் - பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பரிசு வழங்கினார்.

          வேலூர் நறுவீ மருத்துவமனையில் நேற்று 21-12-2024 நடைபெற்ற நிறுவனர் தின விழாவில் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில்  மருத்துவமனை ஊழியர்களுக்கு இடையே பல்வேறு கலாச்சார போட்டிகள் நடத்தப்பட்டது.

   இந்நிகழ்வில் நாட்டில் பசுமையை பற்றிய விழிப்புணர்வு, உலக சமத்துவம், மதங்களுக்கு இடையே சகோதரத்துவம், போதை  ஒழிப்பு, உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

   நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை நறுவீ மருத்துவமனை மனித வளத்துறை தலைவர் மேனகா வரவேற்றார். நிகழ்ச்சியை யொட்டி நடத்தப்பட்ட பரதநாட்டியம், தனிநபர் மற்றும் குழு நடனங்கள், பாட்டுக்கு பாட்டு, ஆடல் பாடல், பே'ன் ழி'லீ, ரங்கோலி, முக ஓவியம், பானை ஓவியம், நெருப்பில்லா சமையல், குறும்படம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

          நிகழ்ச்சிக்கு நறுவீ மருத்துவமனை நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்துகலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

 அதில்,     புவி வெப்பம் அடைதலை தடுக்கும் வகையில் ஆங்காங்கே நம்மால் முடிந்தவரை மரக்கன்றுகள் நட்டு பசுமையை உருவாக்க வேண்டும். புவி வெப்பமடைதலை தவிர்க்க அரசு பல்வேறு வழிகாட்டு முறைகளை அறிவித்துள்ளது அதனை நறுவீ மருத்துவமனை ஊழியர்கள் செயலாக்கும் வகையில் நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

  போதையால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவோம் என்றார்.

          நிகழ்ச்சியில் மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி, பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் குரியன் தாமஸ், காது மூக்கு தொண்டை பிரிவு தலைவர் டாக்டர் மேரி குரியன், நரம்பியல் துறை தலைவர் டாக்டர் சிற்றம்பலம், பொது மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் குணசேகரன், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். முடிவில் துணை தலைமை செவிலியர் வித்யா நன்றி கூறினார்.