1444 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகள் பாதிப்பு அமைச்சர் எ.வ.வேலு தரைப்பாலத்தை பார்வையிட்டு பேட்டி!
ஜி.கே.சேகரன்,
தமிழகத்தில் மழைவெள்ளத்தால் 1444 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகள் பாதிப்பு முதற்கட்டமாக சி.ஆர்.ஐடிபி நிதியிலிருந்து ரூ.200 கோடி எடுத்து நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக செப்பணிடப்படும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ,.வ,வேலு விரிஞ்சிபுரத்தில் பேட்டியளித்தார்
வேலூர்மாவட்டம்,வேலூர் அருகே விஞ்சிபுரம் பாலாற்றில் சமீபத்தில் பெய்த மழைவெள்ளத்தால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு வீடுகளும் சேதமடைந்தது அவைகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன்,நந்தகுமார் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப, பயிற்சி ஆட்சியர் செல்வி ஐஸ்வர்யா ஊராட்சிமன்ற தலைவர் குணசுந்தரி மற்றும் அரசு அதிகாரிகல் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார் பின்னர் மாதனூர் தரைப்பாலத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழ்நாட்டை பொருத்தவரையில் இந்த ஆண்டு பெரும் மழை பெய்துள்ளது 105 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த மழை பெய்துள்ளது.
ஆந்திரா,கர்நாடக மாநில மழைவெள்ளமும் பாலாற்றில் சென்று விரிஞ்சிபுரம் பாலம் 322 மீட்டர் பாலம் அடித்து செல்லப்பட்டது.
தற்காலிகமாக போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும் அதன் பின்னர் சுமார் 30 கோடியில் உயர் மட்ட பாலம இங்கு அமைக்கப்படும் தமிழகத்தில் மொத்த தரைப்பாலம் 1287 இந்த ஆண்டு 648 மேல்மட்ட பாலம் முதற்கட்டமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பல இடங்களில் பாலத்தின் இணைப்பு சாலைகள் கரைந்து போய்வுள்ளது ஒட்டுமொத்தமாக கணக்கு எடுக்கவில்லை 75 சதவிகிதம் பாலங்கள் உடைந்துள்ளது மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டுள்ளோம்.
நெடுஞ்சாலைதுறைக்கு ரூ.1444 கோடி கேட்டுள்ளோம் கன்னியாகுமரி,கடலூர் வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் பாதிப்புகள் உள்ளது தற்காலிகமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சி.,ஆர்'ஐடிபி நிதியை ரூ.200 கோடி பயன்படுத்தபடவுள்ளது.
அதனை அடுத்து உடனே சாலைகள் பாலங்களை சீரமைக்க உள்ளோம் தடுப்பனையை கட்ட முதல்வருக்கு ஆய்வு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது அதனை நிறைவேற்றினால் மகிழ்ச்சியளிக்கும் என்று சொன்னார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூரில் இருந்து உள்ளி வழியாக குடியாத்தம் செல்லும் தரைப்பாலம் பாலாற்றின் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது. இதனை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம்
மேலும் இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, வில்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.