விரைந்து சென்ற பேரிடர் மீட்பு படை!

விரைந்து சென்ற பேரிடர் மீட்பு படை!

 கு.அசோக்,

  மிக்ஜாம் புயல் மற்றும் கன மழை எச்சரிக்கை காஞ்சிபுரம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு 25 பேர் கொண்ட நான்கு குழுக்கள் விரைந்தனர்.

 வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம், புதுவை ஆகிய இருபகுதிகளில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.   

   இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவினை மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுகொண்டதின் பேரில் படை பிரிவின் துணை கமாண்டண்ட் சுதாகர் தலைமையில் 25 பேர் கொண்ட நான்கு குழுக்கள் காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு நவீன கருவிகள், ஆயுதங்களுடன்  விரைந்தனர்.