வேலூர் கிறிஸ்துமஸ் பண்டிகை! சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு! பைக் ரேஸ் ஓட்டினால் தண்டனை!

ஜி.கே.சேகரன்,
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். துணை ஆணையர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் தலைமையில் 8,000 போலீசார் விரிவான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
காவல்துறையின் பாதுகாப்பு பணிக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். டிச.24-ல் இரவு முதல் டிச.25 கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் வரை சென்னையில் உள்ள 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ரேசிங்கில் ஈடுபட்டால், அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் ஒட்டுனர் உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
வேலூர் தென்னிந்திய திருச்சபை தேவாலயத்திலும் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள ஊரீசுபள்ளி வளாகத்தில் உள்ள தென்னிந்திய திருசபையில் தென்னிந்திய திருசபை பேராயர் சர்மா நித்யானந்தம் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கூட்டமானது நடந்தது. இந்த விழாவில் திரளானோரும் தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
இதில் ரஷ்யா உக்ரைன் போர் ,இஸ்ரேல் பாலஸ்தீன போர்கள் ஆகியவைகளில் உயிரிழந்தவர்களுக்கும் திருநெல்வேலி தூத்துக்குடி,சென்னை ஆகிய வெள்ளங்களில் பலியானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு இந்த ஆண்டு அதிக அளவு சோக ஆண்டாக அமைந்தது அடுத்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வழிபாடுகள் செய்தனர்
இதே போல் வேலூர் தென்னிந்திய திருச்சபை மத்திய பேராலயத்தில் ஆயர் சைமன் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் வேதமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ப்ங்கேற்று கேக் வெட்டிகொண்டாடினார்கள் இதில் மேயர் சுஜாதா மண்டல குழுதலைவர் நரேந்திரன்,மாமன்ற உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் திரளான திருச்சபை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.