தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்த திருப்பத்தூர் எம்.எல்.ஏ.!

தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்த திருப்பத்தூர் எம்.எல்.ஏ.!

ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சென்னை மண்டல தென்னக ரயில்வே பொது மேலாளர் மால்யா வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் திருப்பத்தூர் எம்.எல்.ஏ.நல்லதம்பி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

இது பற்றின விவரம் வருமாறு,

  திருப்பத்தூரில் ரயில்வே ஜி.எம். ஆய்வு  செய்த போது, அங்கு புதியதாக கட்டப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்டேஷன் மாஸ்டர்  கட்டிட அலுவலகத்தில் கணினி மயத்தில் இயங்கும் ரயில் பணிகள் மற்றும் ஒரு ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு ரயில் நிலையத்திற்கு வரும் தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

  மேலும் ஏற்கனவே 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ரயில்களின் வேகத்தை 120 கிலோமீட்டர் வேகமாக உயர்த்த இருப்பு பாதைகளில் ஆய்வு செய்தார்.

 அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மேற்கு குடியிருப்போர் நல சங்கம் திருப்பத்தூர் ரயில்வே ஜங்ஷன் பயணிகள் சங்கம் உள்ளிட்டோர் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட அத்தியாவசியமான ரயில் சேவை கோரிக்கைகள் குறித்தும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கடந்து செல்லும் லெவல் கிராசிங் பிரச்சனைகள் குறித்தும் மனு கொடுத்தனர்.

 அப்போது சேலம் கோட்டம் டிஆர்எம் ஸ்ரீனிவாசன் சென்னை பிசிஓஎம் நீனா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

  பின்னர் தென்னக ரயில்வே பொது மேலாளர் மால்யா கூறுகையில் பயணிகள் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்ததாகவும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்திடமும் கோரிக்கைகள் மனுக்களாக பெறப்பட்டுள்ளதாக கூறினார்.