தீபாவளிக்கு சொந்த ஊர் போகிறீர்களா?முன்பதிவு துவங்கியது!!

ஜி.குலசேகரன்,
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி மண்ணின் மைந்தர்கள் பயணிப்பது தீபாவளி நேரங்களில் அதிகரிக்கும். இதனால் பேருந்து தட்டுபாடு ஏற்படுவதுண்டு.
இதை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் 'டிக்கெட்' முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது.
இதன் வாயிலாக, கடைசிகட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் பயணிகள் முன்கூட்டியே தங்கள் இருக்கையை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அக்டோபர் 24-ந்தேதி சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆயத்தமாகி வரும் நிலையில், பேருந்துகளில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அந்தவகையில் அக்டோபர் 21-ந்தேதிக்கான ஆன்லைன் மூலம் 'டிக்கெட்' முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.
ஆகவே தீபாவளி பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாக 'டிக்கெட்'டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.