சுகாதாரத்துறை சீர்க்கெட்டுள்ளது!கூட்டணியினரும் எதிர்கட்சியினரும் எங்களை கண்டுகொள்வதில்லை!

கு.அசோக்,
தமிழக சுகாதாரத்துறை சீர்க்கெட்டு உள்ளது, கூட்டணியிலிருப்பவர்களும் சரி, எதிர்கட்சியும் சரி எங்களை கண்டுகொள்வதில்லை என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுசெயலாளர் வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம், வேலூ£ரில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு மாவட்டத்தலைவர் நவீன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பீமாராஜ் ,மகாதேவன்,அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இதில் திரளான 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில பொது செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த 108 ஆம்புலன்ஸ் இயக்கும் தனியார் நிறுவனம் ஆம்புலன்ஸ் பராமரிப்பு செய்யாமலும் தொழிலாளர்களுக்கு எதிராகவும் சட்டவிரோத நடவடிக்கையை செய்கின்றனர்.
இதனை செய்யும் ஈ.எம்.ஆர்.ஐ ஜி.எச்.எஸ் என்ற நிறுவனம் லாபம் நோக்கில் சேவையை செய்யாமல் இருக்கவேண்டும். தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்வதை தடுக்க வேண்டும், கிராமப்புறங்களில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கபடும் 108 ஆம்புலன்ஸால் மக்களுக்கு உயிரிழ்ப்புகள் ஏற்படுகிறது.
இதற்கு காரணம் தொழிலாளர்கள் தான் என பொய்யாக பழிசுமத்தபடுகிறது.
அரசு ஆம்புலன்ஸ் தடையின்றி இயங்கவும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவன சட்டவிரோத நடவடிக்கையை கைவிட செய்யவும் சுகாதார செயலாளர் திட்ட இயக்குநர் ஆகியோர்களிடம் புகாரை கொடுத்தால் நிர்வாகம் தொழிற்சங்கம் ஏற்றுகொள்ளாததால் ஒன்றும் செய்ய முடியாது என அரசு கைவிரிப்பதை கைவிட வேண்டும்.
சுகாதாரத் துறை மிகப்பெரிய சீர்கேட்டில் உள்ளது அதனை பிரச்சாரம் செய்து மக்களை அணி திரட்டி பொது வேலை நிறுத்ததை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் செய்வோம்.
மேலும் எல்.பி.ஜி.தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் தொழிலாளர்களையும் அரசு முறையாக பராமரிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றுகிறோம்.
வேலூர் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பாதிக்கப்பட்டனர் இது முழுக்க முழுக்க அரசின் பாராமுகம் தொழிலாளர்களுக்கு சம்பளம் இல்லை மெக்கானிக் இல்லை நுகர்வோர் உயிருடன் சிலிண்டர் நிறுவனங்கள் விளையாடுகிறது.
ஐந்து பேர் உயிருக்கு போராடுகின்றனர் இதற்¢கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடுவோம்.
ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நுகர்வோரையும் எல்.பி.ஜி தொழிலாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அணிதிரட்டி போராட்டம் நடத்துவோம்.
திமுக கூட்டணியிலிருக்கும் எந்த கட்சியும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பது தான் தமிழகத்தின் சாபக்கேடு.
மேலும் அவர்கள் கூட்டணி தர்மம் என்ற பெயரில் சுகாதார சீர்கேட்டை தட்டி கேட்கவில்லை. அதிமுகவும் அறிக்கை அரசியலுடன் நிறுத்திவிட்டனர்.
ஒட்டுமொத்த தமிழக சுகாதார துறையின் முதுகெலும்பு தொழிலாளர்கள் அவர்களை கசக்கி பிழிய அரசே மாவட்ட சுகாதார சங்கம் என்ற பெயரில் ஒரு வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுக்கின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் 2553 சுகாதார பணியாளர்களை பணி அமர்த்துவதாக பேசுகிறார். ஆனால் லட்ச்சக்கணக்கான தொழிலாளர்கள் தேவை. அதனை ஒப்பந்த முறையில் எடுப்பதை எதிர்க்கிறோம்.
ஒப்பந்த தொழிலாளர்கள் நடவடிக்கை சரியாக செயல்படுகின்றனர் ஆனால் ஊதியம் வாரவிடுமுறை போன்றவைகள் எங்களுக்கு அளிப்பதில்லை.
12 மணி நேரம் உழைக்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு குடிநீர் கூட தருவதில்லை. இதனால் சிறுநீரக கோளாறுகள் பெண் தொழிலாளர்கள் கர்பப்பை கோளாறுகள் வருகிறது. இதனை சரி செய்ய வேலை பாதுகாப்பு வேண்டும் மக்கள் படிப்படியாக அரசு மருத்துவமனையை கைவிட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் அரசின் யுக்தியே இது என்று சொன்னார்.