கிவி பழமும் நியூசிலாந்தில் வேலையும்...மோசடியோ மோசடி!

ஜி.கே.சேகரன்,
நியுசிலாந்து நாட்டில், கிவி பழ தோட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்த நபரை கைது செய்யக்கோரி அவரது வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்த பூபதி மற்றும், சுபாஷ் ஆகியோர், நியுசிலாந்து நாட்டில் கிவி பழம் சீசன் ஆரம்பித்துள்ளதாகவும், கிவி பழ தோட்டத்தில் பராமரிப்பு பணிக்காக 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஆட்களை வேலைக்காக நியுசிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக பலரிடம் கூறியிருக்கின்றனர்.
அந்த வகையில் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் சுமார் 1 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை என 2 கோடிரூபாவை பெற்றுள்ளனர்.
பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வாங்கிதராததால், பணத்தை இழந்த 50 க்கும் மேற்பட்டோர் மோசடியில் ஈடுப்பட்ட பூபதி வீட்டை முற்றுக்கையிட்டு அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.