ரியல் எஸ்டேட் முதலாளி கடத்தி தாக்கு! போலிஸ் மெத்தனம்!

ரியல் எஸ்டேட் முதலாளி கடத்தி தாக்கு! போலிஸ் மெத்தனம்!

ம.பா.கெஜராஜ்,

  வேலூர் காட்பாடி பகுதியைச் சேர்ந்த கி.செல்வம் யாதவ் என்பவரை அவரது உறவினர்களே கடத்தி அடைத்து வைத்து தாக்கியிருக்கிறார்கள்.  அவரை எஸ். ஐ. ஒருவர் மீட்ட நிலையில், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஐந்து நாட்கள் ஆகியும் போலிசார் ஸ்டேட்மென்ட் எடுக்க ஆஸ்பத்திரிக்கு வரதாததால் பாதிக்கப்பட்ட செல்வம் ஆன் லை மூலமாகவும், பதிவுத்தபால் வாயிலாகவும் போலிசுக்கு புகார் அனுப்பியிருக்கிறார்.

 அவரது புகாரில் தெரிவித்திருப்பதாவது,

நான் 04.12 2022 ஆம் தேதி அன்று பகல் சுமார் 2.30.மணி அளவில் வேலூர் காட்பாடி காந்தி நகர் ஓடை பிள்ளையார் கோயில் அருகில் டி குடித்துவிட்டு  ஆக்சிலியம் கல்லூரிக்கும் திருவள்ளுவர் நகருக்கும் இடையே மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது  சிவா, மோகன், பொன்னுரங்கம் என்பவர்கள் என்னை ஸ்கூட்டரில் கடத்திச் சென்று கோரந்தாங்கல் கிராமத்தில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து இரும்பு ராடு, உருட்டு கட்டை ஆகியவை கொண்டு தாக்கி மற்றும் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

   காட்பாடியில் உள்ள சொத்தை எனக்கு எழுதி கொடு என்று பொன்னுரங்கம் தாக்கியுள்ளார்.

 அப்போது நிர்மலா, சக்குபாய், அம்பிகா, ல்ஷ்மணன், தனியார் பேருந்தின் கண்டக்டராக உள்ளவர் மற்றும் அவரது மகன்கள் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    நான் அணிந்திருந்த சுமார் 20,000 மதிப்புள்ள சுமார் அரை சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டனர், மோட்டார் பைக்கை என் மாமனார் பொன்னுரங்கம் பறித்துக் கொண்டனர். என்னுடைய பைக் சாவிக் கொத்தில் பீரோ சாவி உட்பட பல சாவிகள் உள்ளன பல்வேறு சொத்துக்களின் டாக்குமெண்ட்டுகளும் உள்ளன.

  என்னை கடத்திய சம்பவம் குறித்த ஆதாரங்கள் சம்மந்தப்பட்ட இடங்களின் சிசிடிவி கேமிராக்களை பார்த்தால் தெரியவரும்.

  நான் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாலும், போலீசார் இதுவரை என்னிடம் ஸ்டேட்மெண்ட் எடுக்காததினாலும் எனது புகாரை ஆன்லைன் வாயிலாக அனுப்பி வைக்கிறேன்.

  எனக்கு சிடிஸ்கேன் மற்றும் எக்ஸரே எடுக்கப்பட்டிருக்கு. எனது முதுகு எலும்பில் சின்ன விரிசல் இருப்பதாக மருத்துவர்கல் சொன்னார்கள்.

   ஐயா அவர்கள் என்னை கடத்திச் சென்று நகை வண்டியை பறித்து என்னை தாக்கியதுடன் வெட்டி கொலை செய்ய முயன்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனது அவரது புகாரில் தெரிவித்துள்ளார்.

  இந்த கடத்தல் சம்பவமானது விருதம்பட்டு காவல் நிலையத்துகுட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட நிலையில், விஷயத்தை திசை திருப்பும் முயற்சியாக அங்கு எஸ்.எஸ்.ஐ,ஆக பணியாற்றும் ராமமூர்த்தி என்பவர் காட்பாடி ஏரியாவில் இந்த கடத்தல் நடந்தது என்று சொல்லி பாதிக்கப்பட்ட செல்வத்திடம் இன்று 09.12.2022 காலை 9.30 மணி வரை ஸ்டேட்மென்ட் வாங்காமல் பார்த்துக் கொண்டார்.

  ஆனால் செல்வத்தை கடத்திய நபர்களை காப்பாற்றும் விதமாக அவர்களை சந்தித்து செல்வத்தின் மீது காட்பாடி ஸ்டேஷனில் ஒரு புகார் கொடுக்க வழிகாட்டியுள்ளார் என்கிற விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.