எஸ்.பி.விரட்டிப்பிடித்த பட்டாக்கத்தி இளைஞர்கள்!குறட்டைவிடும் வடக்கு காவல் நிலையம்!
ஜி.கே.சேகரன்,
பட்டப்பகளில் பட்டாக்கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள். விரட்டிப்பிடித்த எஸ்.பி. செல்வகுமார். பரபரப்பை கூட்டும் சிசிடிவி காட்சிகள்.
வேலூர் மாநகரின் மையப்பகுதியான கிரீன் சர்க்கில் அருகே சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழிலை செய்து வந்தவர்களிடம் (நரிக்குறவர்கள்) ஓல்டுடவுன் பகுதியை சேர்ந்த லிங்கேஷ்வரன், கிஷோர், பாலாஜி ஆகிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த 1500 பணம், 1 செல்போனை வழிபறி செய்துக்கொண்டு தப்பினர்.
இதனை அவ்வழியாக காரில் சென்ற சென்ற எஸ்.பி செல்வகுமார் பார்த்தும் உடனே வண்டியிலிருந்து அவசர அவசரமாக இறங்கி பட்டாகத்தி இளைஞர்களை விரட்டி பிடித்தார்.
தகவல் அறிந்த வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் பின்னர் அங்கு வந்து சேர்ந்தார்.
இளைஞர்களிடமிருந்து இரண்டு பட்டாக்கத்தி ஒரு செல்போன் ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த எஸ்.பி.செல்வக்குமார் அவற்றை வடக்கு காவல் நிலையத்தினரிடம் ஒப்படைத்தார்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட பாலாஜி என்பவன் தப்பியோடிய நிலையில் லிங்கேஷ்வரன், கிஷோரை ஆகியோர் மீது வழக்கு பதியபட்டு நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
வேலூர் டிஎஸ்பி அலுவலகத்தை மையமாக கொண்டு நகர் முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அவற்றை கண்காணிக்க வேண்டியவர்களும் சரி, வடக்கு காவல் நிலையாத்தாரும் சரி குறட்டைவிட்டுக் கொண்டிருப்பதால் எஸ்.பி.யே களத்தில் இறங்கி விரட்டிப்பிடிக்க வேண்டியதாயிற்றும் என்று காவல் துறை வட்டாரத்தினரே சொல்கிறார்கள்.
வடக்கு காவல் நிலையத்திலிருந்து எட்டிப்பார்த்தாலே பல இல்லீகல் பார்கள் கண்ணுக்கு தெரிகிறது. அவற்றில் தான் பெரும்பாலான குற்றவாளிகள் கூடுவதாக தகவல்.
கடந்த சில தினங்களாகவே வேலூர் மாநகரில் கடந்த சில நாட்களாகவே தொடர் கொலைகள் நடைபெற்று வருகிறது. நேற்றும் ஒரு இளைஞர் முன்விரோமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மாநகரின் முக்கிய சாலையில் சுற்றிய சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தில் உள்ளனர்.
இருந்த போதும் பட்டாக்கத்தி இளைஞர்களை விரட்டிச் சென்று பிடித்த எஸ்.பி.செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுகள் வந்துக் கொண்டிருக்கின்றன.