மருத்துவக் கல்லூரியில் 66 மாணவர்கள் கோவிட்-19, விடுதிக்கு சீல்!

மருத்துவக் கல்லூரியில் 66 மாணவர்கள் கோவிட்-19, விடுதிக்கு சீல்!

 தியேடர்,

 மருத்துவக் கல்லூரியில் 66 மாணவர்கள் கோவிட்-19, விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 கர்நாடக் மாநிலம், தார்வாட்டில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் 66 எம்பிபிஎஸ் மாணவர்கள் கொரோனா வைரஸுக்கு பாதிப்படைந்துள்ளார்கள்.

 இது குறித்து மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், தார்வாட்டில் உள்ள எஸ்டிஎம் மருத்துவக் கல்லூரியில் 400 மாணவர்கள் படிக்கின்றனர், இங்குள்ள 300 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள மாணவர்களுக்கான கூடுதல் சோதனை நடந்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் நித்தேஷ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

 மேலும், சுமார் 3,000 ஊழியர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரி கூறினார்.

  கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 66 மாணவர்களுக்கும் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்த வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், "விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் மேலும் கூறினார்.   

 மேலும், அவர்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். சோதனை முடிவுக்காக காத்திருக்கும் நபர்களும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர், என்றார்.

  "பெரும்பாலான ஆசிரியர்களும் தடுப்பூசி போடுகிறார்கள். அவர்களில் யாராவது தடுப்பூசி எடுக்கவில்லை என்றால், அவர்கள் இன்று தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வோம்," என்று அவர் மேலும் கூறினார்.

   பல் மருத்துவம், ஆயுஷ், செவிலியர் மற்றும் அதுசார்ந்த மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்து சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கத் து.