65 வயதில் காதலியை கரம் பிடித்து அசத்தல்!

65 வயதில் காதலியை கரம் பிடித்து அசத்தல்!

   டி.தியேடர்,

  65 வயது முதியவர்,35 ஆண்டுகளுக்கு பிறகு தனது காதலியை கரம் பிடித்து அசத்தியுள்ளார்

   கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவை சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது 65). இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவுக்கு வந்து கூலி வேலை பார்த்தார். அப்போது இவருக்கும் மைசூருவை சேர்ந்த அவரது அத்தை மகளான ஜெயம்மா (60) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

  இவர்களது காதலுக்கு ஜெயம்மாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவரது பெற்றோர் ஜெயம்மாவுக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைத்தனர்.

  இருந்தாலும்,காதலன் சிக்கண்ணா நினைவிலேயே இருந்ததால் ஜெயம்மாவால் கணவருடன் சரியாக குடும்பம் நடத்த முடியவில்லை. சில ஆண்டுகள் கணவருடன் குடும்பம் நடத்திய ஜெயம்மா, 4 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார்.

 அதே போல், ஜெயம்மாவின் காதலன் சிக்கண்ணவோ, திருமணம் எதுவும் செய்யாமல் ஜெயம்மாவின் நினைவிலேயே வாழ்ந்து வந்தார்.

  இந்நிலையில், சமீபத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் சந்தித்து உள்ளனர். அப்போது தான் சிக்கண்ணா திருமணம் செய்யாமல் இருப்பது ஜெயம்மாவுக்கும், ஜெயம்மா கணவரை பிரிந்தது சிக்கண்ணாவுக்கும் தெரியவந்தது. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

  35 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டஇருவரும் கண்ணீர் கலந்து காதலை புதுப்பித்துக் கொண்டனர்.

 அப்படியிருக்க  சிக்கண்ணாவும், ஜெயம்மாவும், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் மண்டியா மாவட்டம் மேல்கோட்டைக்கு சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்