நேற்று நிலா! நாளை சூரியன்! திகைக்கும் உலக நாடுகள்!

நேற்று நிலா! நாளை சூரியன்! திகைக்கும் உலக நாடுகள்!

 உ.சசிகுமார்,

  சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி, தென் துருவ பகுதியை ஆய்வு செய்து வருவதையும், பல்வேறு தகவல்களை அது பூமிக்கு அனுப்பிவைப்பதையும் அறிவோம். 

 திட்டமிட்டப்படி  விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி உள்ளதை இது உறுதிபடுத்துகிறது.

  இந்நிலையில் சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அறிவித்திருந்த வகையில், வரும் செப்டம்பர் 2-ந்தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது இது உலக நாடுகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.