போலிசாரை குறைபட்டுக் கொண்ட புகார்தாரர்கள்!

ஜி.கே.சேகரன்,
போலிசாரை புகார்தாரர்கள் குறைபட்டுக் கொண்டனர், எஸ்.பி.முன்னிலையில் இது நடந்ததால் சம்மந்தப்பட்டவர்கள் அசடு வழிந்தார்கள்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் இ.கா.ப. தலைமையில் புகார்தாரர்களின் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
கருத்து கேட்பு கூடத்தில் கலந்துக் கொண்ட காவல்துறை அலுவலர்கள் புகார்தாரர்களை தொலைபேசியில் அழைத்து 5 கேள்விகளைக் கேட்டனர்.
அதில் முக்கியமாக தங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதா? போலீசாரிடம் ஏதேனும் பணம் கொடுத்தீர்களா? போலீசார் மீது புகார்தாரர்களுக்கு திருப்தி உள்ளதா? போலீசாரின் நடவடிக்கைக்கு புகார்தாரர்கள் எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்? என கேட்க்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 1450 சி.எஸ்.ஆர் போடப்பட்டதும், மேலும் முதல் தகவல் அறிக்கை 326 பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் போலீஸார் மீது அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்ட புகார்தாரர்கள் 99 நபர்களும் வழக்கு பதிவு செய்த 35 புகார்தாரர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் கூறினர்.
அவற்றை சரி செய்வதாக எஸ்.பி.உறுதியளித்தார்.