மாற்று திறனாளிகள் திடீர் சாலைமறியல்!

மாற்று திறனாளிகள் திடீர் சாலைமறியல்!

கு.அசோக்,

வேலூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.

 வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பார்வையற்ற கல்லூரி மற்றும் முன்னாள் பள்ளி  மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சுமார் 30க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 இது முக்கிய கோரிக்கைகளாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன தேர்வில் இருந்து முழுமையாக விலகளித்து உடனடியாக பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க வேண்டும்.

 வேலையில் இல்லாதோர்காண உதவி தொகையை ரூபாய் ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பார்வையற்ற அரசு பணியாளர்களுக்கு சிபிஎஸ் எனப்படும் புதிய ஓய்வு திட்டத்தை ஜிபிஎஃப் எனப்படும் பழைய ஓய்வு திட்டமாக மாற்றி வழங்க உத்தரவிட வேண்டும்.

 என்பதை உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்தது பின்னர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனுவும் அளித்தனர்.