ரூ.5.6 கோடி வரிபாக்கி! பீடி சுற்றும் பெண்ணுக்கு வருமானவரித்துறை நோட்டிசு! தொடரும் பரிதாபம்!!

ரூ.5.6 கோடி வரிபாக்கி! பீடி சுற்றும் பெண்ணுக்கு வருமானவரித்துறை நோட்டிசு! தொடரும் பரிதாபம்!!

ஜி.கே.சேகரன்,

  வாணியம்பாடி அருகே பெண் தொழிலாளிக்கு  ரூ.5.6 கோடி வரிபாக்கி இருப்பதாக வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்தால் பெண் தொழிலாளி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்ததுடன், மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என  கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார்கள்.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், சிக்கனாங்குப்பம், புதுமனை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (50). பீடித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (40). இவர்களது மகள் வான்மதி (22). இவர் தன் கணவர் அபிஷேக் (25) என்பவருடன் ஆம்பூரில் வசித்து வருகிறார்.

   இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ராஜா வீட்டுக்கு வான்மதி பெயருக்கு சென்னை, நந்தனம் பகுதியில் உள்ள வணிகவரித்துறை துணை ஆணையர் அலுவலகத்திலிருந்து பதிவுத் தபால் ஒன்று வந்துள்ளது. அந்தக் கடிதம் ஆங்கிலத்தில் இருந்ததால் அதை வான்மதி உட்பட அவரது குடும்பத்தார் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

   இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மீண்டும் வந்த வணிகவரித்துறை கடிதத்தை ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் வான்மதி கொடுத்து விவரம் கேட்டுள்ளா£.¢ பிறகுதான் அது கடிதமல்ல நோட்டீஸ் என்பதும் அதில் குறிப்பிட்டிருந்த தகவலைக் கேட்டதும் வான்மதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

   மேலும் துறை அலுவலகத்தின் வந்த அந்த நோட்டீசில், வான்மதி வணிகவரித் துறைக்குப் பாக்கி வைத்துள்ள 5 கோடியே 62 லட்சத்து 11 ஆயிரத்து 766 ரூபாய் ரொக் கப்பணத்தை 2 நாட்களில் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, வாணியம்பாடியில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்துக்கு நேற்று வான்மதி தன் கணவருடன் சென்று முறையிட்டார். அந்தக் கடிதத்தை வாங்கி பார்த்த வணிகவரித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்துவதாகத் தெரிவித்தனர்

 இதுகுறித்து வான்மதி கூறியதாவது, என் கணவர் பீடித் தொழிலாளி, தற்போது உடல் நிலை சரியில்லை, நான் நூறுநாள் வேலைக்குச் செல்கிறேன். இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வந்த வீட்டில் தொடர்ந்து பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் வசித்து வரும்  நாங்கள் வணிகவரித்துறைக்கு ரூ.5.6 கோடி பாக்கி என வந்த நோட்டீஸ் எங்களை நிலைக்குலைய செய்துள்ளது.

 இதனால் தன் மகளை கட்டிக் கொடுத்த மாமியார் வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சனை உள்ளாகி வருவதாகவும், வெளியில் எங்கு சென்றாலும் அனைவரும் தங்களை நீங்கள் கடன் வாங்கி உள்ளீர்களா என கேள்வி கேட்டு வருவதால் தொடர்ந்து ஒரு மாத காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தங்களைப் போன்ற ஏழைகள் சாதாரணமாக இருபதாயிரம் வங்கி கடன் பெற்றால் ஆயிரம் கையெழுத்து கேட்கின்றனர்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தங்களுக்கு எப்படி 5.6 கோடி கடன் கொடுப்பாங்க எனக் கேள்வி எழுப்பிய அவர் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்திருப்பதாகவும் அங்கு செல்வதற்கு கூட 200 ரூபாய் நான் கடன் பெற்று சென்றேன், இதற்காக சென்னை வணிகவரித்துறைக்கு எப்படி நான் செல்ல முடியும் என கேள்வியெழுப்புகிறார்.

 இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசு முழு பொறுப்பு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

   இதுகுறித்து வாணியம்பாடி வணிக வரித்துறை அலுவலர்களிடம் விசாரித்தபோது, இதுபோன்ற பிரச்சினைகள் சில இடங்களில் ஏற்படுகிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி வருகிறோம். விரைவில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என எனது தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வான்மதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது சம்பந்தமாக புகார் மனு அளித்துள்ளார்.

 ம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் தொடர்ந்து கூலித் தொழிலாளி மற்றும் தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு  இதுபோன்ற வருமானவரி துறைக்கு கோடிக்கணக்கில் பாக்கி உள்ளதாக வருமானவரித்துறை அலுவலகத்திலிருந்து  நோட்டீஸ் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது கூலித் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

  இது குறித்து விசாரித்த போது பேர்னாம்பட்டைச் சேர்ந்த பலர் பெங்களூருவில் முகாமிட்டுக்கொண்டு இது போன்ற வரி ஏய்ப்பு மோசடியை செய்து வருகிறார்கள். சொல்லப் போனால் அவர்கள் ஏழை எளிய மக்களை குறி வைத்து செயல்படுகிறார்கள். அரசின் நலத்திட்டங்களை பெற்று தருவதாக சொல்லி ஆதார் மற்றும் பேன் அட்டைகளின் நகல்களை பெற்றுக் கொண்டு இவ்ப்படி வரி ஏய்ப்பு செய்து வருகிறார்கள்.

 குறிப்பாக ஜிஎஸ்டி வரிஏய்ப்பை செய்து கொண்டிக்கின்றனர். இதுதொடர்பாக திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் பல்வேறு புகார்கள் காவல் துறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வரி ஏய்ப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.