சென்னை வழக்குரைஞர் மீது நில மோசடி வழக்கு!

தாம்பரம் முரளிதரன்,
சென்னையில் வழக்குரைஞராகவும், மெட்ராஸ் பார் அசோசியேஷனில் உறுப்பினராகவும் உள்ளவர் ஓ.வி.கிருஷ்ணன்.இவர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது பற்றிய விவரம் வருமாறு,
வழக்கறிஞர் ஓ.வி.கிருஷ்ணன்,சகோதரிகள் மதுராந்தகம் தாலுக்கா கூடலூரை சேர்ந்த விஜயகுமாரி, ராஜேஸ்வரி, மதுராந்தகம் தாலுக்கா கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரேணுகாம்பாள், உத்திரமேரூர் தாலுக்கா, அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி,கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த லஷ்மிகாந்தம், ஒ.வி.கிருஷ்ணனின் சகோதரர்களின் மகன்களான மதுராந்தகம் தாலுக்கா கூடலூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ண குமார், செங்கற்பட்டு அலகேசன் நகரைச் சேர்ந்த மனோகரன் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தது, அவைகளை அரசு ஊழியர் முன் சமர்பித்து பதிவு செய்தல், கொலை மிரட்டல், கூட்டு சதி போன்ற குற்றங்களுக்காக 120(பி),420,465,467,468,471,507,506 (2) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ், செங்கற்பட்டு மாவட்ட நிலப்பறிப்பு தடுப்பு பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கின்றனர்.
கிழக்குகடற்கரை சாலை,கூவத்தூரை அடுத்த வடபட்டினம் கிராமத்தில், மங்கம்மாள் என்பவரின் நிலங்களையும் பறிக்கும் நோக்குடன்,2003'ல் ஒரு போலி ஆவணமும், 2012'ல் மற்றொரு போலி ஆவணமும் தயாரித்துள்ளனர்.
மேலும் அவைகளை செய்யூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
இது மட்டுமின்றி, ரூபாய் ஒரு கோடி கேட்டு, எண்பது வயதான மங்கம்மாள் அவர்களுக்கு, கூட்டாக கொலை மிரட்டல் விட்டதாகவும், தான் வக்கீல் என்று சொல்லிக்கொண்டுநில பறிப்பில் ஈடுபடுவதையே ஓ.வி. கிருஷ்ணன் முழுநேர வேலையாக கொண்டிருப்பதாகவும், செங்கற்பட்டு நில பறிப்பு பிரிவு போலீசார் , மங்கம்மாள் அவர்களின் மருமகன், சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன், சாலையை சேர்ந்த வீ.இளங்கோ கொடுத்த புகார் அளித்தன் பேரில் மேற்கண்ட வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
அதன் பேரில், முதலில் விசாரித்து, ஆவணங்களை பார்த்த பிறகு, புகாரில் முகாந்திரம் உள்ளதாக முடிவுக்கு வந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் ஐ.பி.எஸ். அவர்களின் உத்தரவின் பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.