போதை போலிஸ் பீர் பாட்டிலுடன் கைது!

  கே.ஏ.ஜெகதீஷ்வரி,

  டாஸ் கடையில் போதையில் ரகளை செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார் . கடையநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணி புரிந்து வருபவர் ராஜகுரு. இவர் நேற்று இரவு சேர்ந்தமரம் வீரசிகாமணி ரோட்டிலுள்ள டாஸ்

மாக் கடைக்கு போலீஸ் சீருடையுடன் வந்துள்ளார்.

   கடையில் ' சரக்கு ' கேட்டு தகராறு செய் தார். சரக்கு வாங்க அங்கு வந்த டாஸ் கஸ்டமர்களை போலீஸ்காரர் தகாத வார்த்தைகளால் திட்டினார்.

  டாஸ்மாக் ஊழியர் அவரை தடுத்த போது , அவரையும் தகாத வார்த்தைக ளால் திட்டினார் .

  அதுமட்டுமின்றி கையில் பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்டார்.

 போதை போலிஸ்காரரின் அடாவடிகளை அங்கிருந்த சிலர் வீடியோ பிடித்து பரப்பிவிட்டனர்.

 சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் உயர் அதிகாரி, சேர்ந்தமரம் காவல் நிலையத்துக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

  அதன் பேரில், டாஸ்மாக் ஊழியரிடம் புகாரைபெற்று.  போதை போலிஸ் ராஜ குருவை கைது செய்தனர்.