அதிர்ஷ்டவசமாக தப்பிய தொழிலாளர்கள்!

கு.அசோக்,
தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. தொழிலாளர்கள் உடனடியாக இறங்கியதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணம் அருகே உதிரி பாகங்களை தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனத்திற்கு திருவாலங்காடு பகுதியிலிருந்து 7 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு வந்த வேன் அரக்கோணம் நோக்கி வந்தது.
கம்பெனி அருகில் வேன் போது வேனிலிருந்து புகை வந்ததால் அதிலிருந்து ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் இறங்கிவிட்டனர்.
இறங்கிய ஓரிரு நிமிடத்தில் வேன் குபுகுபுவென தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் வேன் முழுவதுமாக எரிந்து போனது.
அவர்கள் போராடி தீயை அனைத்தனர் இதுகுறித்து அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் வண்டியின் ஒயரில் ஏற்பட்ட தீயால் வண்டி முழுவதும் எரிந்து நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.