பஸ்ஸில் ஏறி துண்டு நோட்டிஸ் கொடுத்த ஐ.ஏ.எஸ்.ஆபிசர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
இன்று (22/12/2021) வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கோவிட்-19 தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
கோவிட்-19 தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பள்ளி மாணவ மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அது தொடர்பான பாதாகைகளுடன் மேற்கொண்ட பேரணியை துவக்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் அவசியத்தின் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கியும், முககவசம் அணியாமல் இருந்த பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் அவர்கள் மாநகராட்சி ஆணையர் திரு.அசோக், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.விஷ்ணுபிரியா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) திருமதி.பானுமதி, மாநகர நல அலுவலர் மரு.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.