இதுதான் சிறந்த காவல் நிலையமாம்! மத்திய அரசு சான்று!

உ.சசிகுமார்,
ஆண்டு தோறும் சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு அதற்கான சான்று வழங்கி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மத்திய அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள காவல்நிலையம் ஆய்வு அதிகாரிகள் கண்ணில் பட்டது.
அதில் வழக்குகளை விரைவாகப் பதிவு செய்தல், விசாரணை மற்றும் வழக்குகளை தீர்ப்பது, நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடித்தல் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் அணுகுமுறை,காவல் நிலையத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு ஆகியவை புலப்பட்டது.
அதன்டிப்படையில் ஆய்வுக்குழு முசிறி காவல் நிலையத்திற்கு தகுதி சான்றிதழ் வழங்கியது.
அதற்கான சான்றிதழை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முசிறி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமை காவலர் மகாமுனி மற்றும் காவலர் ஆனந்தராஜ் ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சி.சைலேந்திர பாபு, இ.கா.ப. அவர்களை நேரில் சந்தித்து சான்றை பெற்றனர்.
காவல்துறை தலைமை இயக்குனர் முசிறி காவல் நிலையத்தாருக்கு பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.