பந்தா காட்டிய தம்பியை தெறிக்கவிட்ட திமுகவினர்!

க.முனிசாமி,
மேடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அடாவடியாக விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் தம்பியை, திமுகவினர் மேடையேறி தெறிக்கவிட்டனர்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசும்போது, மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பற்றி தரக்குறைவாக பேசியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவின் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் மற்றும் சில திமுகவினர் மேடை மீது ஏறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எச்சரித்ததோடு கைக்கை பிடிந்து எறிந்தனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.