போப்பை கட்டித்தழுவிய மோடி:- உலக தலைவர்களுடன் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

 ஜி20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு முன் பிரதமர் மோடி போட் ஆண்டவரை சந்தித்தார்.

 கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் உயர்மட்ட தலைவர் போப் பிரான்சிஸை (போப் பிரான்சிஸ்) பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை 30.10.2021 ஆம் தேதி வாடிகன் நகரில் இந்த சந்திப்பு நடந்தது  இருவரும் சந்தித்த போது கட்டி தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

  அப்போது போப்புக்கு நமது பிரதமர் விசேஷ பரிசுப்பொருட்களை அளித்தார்.

  பின்னர் கொரோனா வைரஸ் போன்றவை தொடர்பான உலகளாவிய சூழ்நிலையை  விவாதித்தனர்.

 முன்னதாக  இத்தாலியில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் குறித்து, வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா) வெள்ளிக்கிழமை கூறியதாவது, "பிரதமர் மோடி மிகவும் மரியாதைக்குரிய போப்பை நேரில் சந்திப்பார், சிறிது நேரம் கழித்து, பிரதிநிதிகள் அளவிலான பேச்சுக்கள் இருக்கும். பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை வத்திக்கான் அமைக்கவில்லை.

   'மிகவும் மதிப்பிற்குரிய (போப்) உடன் உரையாடல் இருக்கும் போது, எந்த நிகழ்ச்சி நிரலும் அமைக்கப்படவில்லை,

  இதற்கிடையில், உலகளாவிய சூழ்நிலை மற்றும் எங்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் குறித்த விவாதங்களில் நாங்கள் பொதுவாக ஈடுபடுவோம் என்று நான் நம்புகிறேன்.' அவர் கூறினார்,

 இந்த ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாடு ரோமில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு உச்சி மாநாடு சவுதி அரேபியாவால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி பிரதமர் இத்தாலி சென்றுள்ள நிலையில் சர்வதேச தலைவர்களை சந்தித்தார்.

  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹோசன் லூங் ஆகியோருடனான சந்திப்புகளும் இதில் அடங்கும்.

  மாநாட்டின் முதல் நிகழ்வாக, உலகளாவிய பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அமர்வு நடைபெற்றது.

  ஜி20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய மோடி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். அப்போது புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

  அதே போல் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் கலந்துரையாடினார் மோடி.

  இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.