நீட் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினால் விட்டுவிடுவோம்! அனுப்பவில்லை என்றால் ஆளுநரை வருடம் முழுவதும் திட்டிகொண்டே இருப்போம்!!துரைமுருகன் பேச்சு!!

நீட் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினால் விட்டுவிடுவோம்! அனுப்பவில்லை என்றால் ஆளுநரை வருடம் முழுவதும் திட்டிகொண்டே இருப்போம்!!துரைமுருகன் பேச்சு!!

ஜி.கே.சேகரன்,

    நீட் விலக்கு கோரி 234 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை இந்தியாவில் எந்த கவர்னரும் செயல்படாத வகையில் கவர்னர் திருப்பி அனுப்பினார் ஆனால் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நீட் விலக்கு கோரி நிறைவேற்றி அனுப்பினோம் - அவர் அதனை ஜனாதிபதிக்கு அனுப்புவாரா அல்லது அவரே வைத்துகொள்வாரா என தெரியவில்லை அனுப்பினால் விட்டுவிடுவோம் இல்லையென்றால் வருடம் முழுவதும் கவர்னரை திட்டிகொண்டே இருப்போம் வேலூரில்  திமுக வேட்பளர்கள் அறிமுக கூட்டத்தில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

   வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள தனியார் மஹாலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர்கள் தலைமையில் நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக நீர் வளத்துறை மற்றும் கனிம வ்ளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் 60 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

 அப்போது அவர் குறிப்பிடுகையில், அதிமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகம் மோசமான நிலையை அடைந்துள்ளது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆயிரம் கோடி ஒதுக்கியதாக கூறினார்கள்.

 ஆனால் அந்த தொகை எங்கே போனது? தெருக்களை நோண்டினார்கள் சாலைகளை சீர் செய்யவில்லை ஒப்பந்ததாரர்கள் சரியாக வேலை செய்வில்லை, அதிகாரிக்ளும் முறைகேடு செய்துள்ளனர்.

¢ இதே போல் சேலம் சரபங்கா திட்டம் மேட்டூரிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் ரூ.560 கோடி ஆனால் திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை, ஊழல் நடந்துள்ளது ஆனால் திமுக ஆட்சியில் அதிக திட்டங்களை செயல்படுத்தினோம் இந்த 8 மாதங்களில் நிர்வாகத்தை கவணிக்க எங்களுக்கு நேரமில்லை.

   எல்லாவற்றிற்கு மேல் இதுவரையில் எந்த கவர்னரும் இந்தியாவில் நடந்துகொள்ளாத வகையில் இந்த தமிழக கவர்னர் நடந்துகொண்டுள்ளார்.

  நானும் முதல்வரும் கவர்னரை சந்தித்து நீட் விலக்கு கேட்டோம் ஆனால் இவ்வளவுக்கு பிறகும் மசோதாவை 234 சட்டமன்ற உறுப்பினர்களை துச்சமாக மதித்து திருப்பி அனுப்பினார்கள் ஆனால் அதே வேகத்தில் சுவற்றில் அடித்த பந்து திருப்பி வருவதை போல் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம்.

  அவர் மீண்டும் திஉப்பி அனுப்ப சட்டமில்லை அவர் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் இல்லையென்றால் அவரே வைத்துகொள்ள வேண்டும்.

  அதனை ஜனாதிபதிக்கு அனுப்பினால் அவரைவிட்டுவிடுவோம் அனுப்பவில்லை என்றால் ஆளுநரை வருடம் முழுவதும் திட்டிகொண்டே இருப்போம்.

  நாங்கள் கவர்னரை மதிக்கிறோம் ஆனால் நிர்வாக தவறுகளை கண்டிக்க வேண்டும் இங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மக்கள் பணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

  சட்டியில் கறியிருந்தாலும் அகப்பை நல்லதாக இருந்தால் தான் அது மக்களுக்கு கிடைக்கும். அது போல வேட்பாளர்களாகிய நீங்களும் நல்ல அகப்பைகளாக மக்கள் பணியாற்ற வேண்டும் என்று பேசினார் இந்த கூட்டத்தில் திரளான திமுகவினரும் பங்கேற்றனர்.