தோழமை கட்சிகளை கழற்றிவிட்ட திமுக:-கிள்ளி கொடுக்கப்பட்ட சீட்டுகள்!! கேட்ட இடங்களை தந்ததாக துரைமுருகன் பேட்டி!!

தோழமை கட்சிகளை கழற்றிவிட்ட திமுக:-கிள்ளி கொடுக்கப்பட்ட சீட்டுகள்!! கேட்ட இடங்களை தந்ததாக துரைமுருகன் பேட்டி!!

ஜி.கே.சேகரன்,

 வார்டு வரையறை குளறுபடிகளுக்கு அதிமுக தான் பொறுப்பு. நாங்கள் காரணம் இல்லை - என கூறி உள்ளாட்சித்தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான பட்டியலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். 

  வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள திமுக மத்திய மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம், திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

 இதில் நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து விளக்கி பேசினார்.

 பின்னர் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்த பட்டியலையும் துரைமுருகன் வெளியிட்டார்.

 அதனைத்தொடர்ந்து, நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தோழமை கட்சிகளை அரவணைத்து இடம் கொடுக்க வேண்டும் என்பது தலைமையின் ஆணை.

 அதற்காக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகளுடன் கலந்து பேசியதில் வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலரிள் விடுதலை சிறுத்தைக்கு ஒரு இடம், மாவட்ட ஊராட்சி குழுவுக்கு காங்கிரசுக்கு ஒரு இடம், ஒன்றிய குழுவில் காங்கிரசுக்கு மூன்று, சி.பி.எம்.ஒரு இடம் சி.பி.ஐ,க்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  கொரோனா காரணமாக முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது.   கூட்டங்களை எல்லாம் நடத்த முடியாது.

   அதிமுகவினர்  வார்டு வரையறையில் குளறுபடிகள் உள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் இதையெல்லாம் மாற்றியதே அதிமுகதான். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது பிரகாசமான வெற்றி பெற்றோம், இப்போதும் அதே போல் வெற்றி பெறுவோம்.

 கூட்டணி கட்சிகளுக்கு கேட்ட இடங்களை ஒதுக்கியுள்ளோம். கட்சிகள் மன மகிழ்ச்சியுடன் சென்றுள்ளனர். ஆகவே அதுகுறித்து நீங்கள் ஒன்றும் கிளப்ப வேண்டாம்.

   குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பியுள்ளது. தண்ணீர் மக்களுக்கு கிடைக்க தடுப்பணைகள் கட்டபடும்.

   நீட் தேர்வு விலக்கு சட்ட ரீதியாக வாய்ப்பில்லை என எதிர்க்கட்சிகள் கூறினாலும் எங்களின் தீர்மானம் வெற்றி பெறும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று கூறினார்.

 குறிப்பு: கூட்டணி கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு  ஊரக உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணியில் சீட் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.