திமுக அமைச்சர்களை வம்புக்கிழுக்கும் பா.ஜ.க அண்ணாமலை!

திமுக அமைச்சர்களை வம்புக்கிழுக்கும் பா.ஜ.க அண்ணாமலை!

 பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 தமிழக மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜியை மையப்படுத்தி சில எதிர்மறை கருத்துக்களை வெளியிட்ட அண்ணாமலை ஆதாரங்கள் என்கிற பெயரில் சில ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

 அந்த கதை சற்று திசைமாறி தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பக்கம் சாய்ந்துள்ளது.

  ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்களை தன் வீட்டில் அமைச்சர் பணியமர்த்தியுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.    

  இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுடிருக்கிறார் அண்ணாமலை, அதில் தான் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

  இது குறித்து ஆங்கிலத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று தி.மு.கவின் போலி சமூக நீதியை பார்ப்போம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடினர் நலத்துறை அமைச்சரான திருமதி கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் சமையல்காரர்களை, தன் வீட்டில் காலை 7 மணி முதல் பத்து மணிவரை பணியாற்றும்படி கூறியுள்ளார்.

 இதற்காக ஒரு அட்டவணையும் தயாரிக்கப்பட்டிருக்கிறது, இது வெட்கக்கேடு!" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 "காற்றில் பறந்தது சமூகநீதி ! மக்கள் வரிப்பணத்தில் அநீதி ! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்களை, தன் வீட்டு வேலைக்காரர்களாக ஏன் பணியமர்த்த வேண்டும் ? ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களே?" எனக் கேள்வியெழுப்பவுக்ம் தவறவில்லை.

 இதற்குப் பதிலளித்துள்ள கயல்விழி செல்வராஜ், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

 எங்கள் வீட்டு சமையலுக்கு நான் எங்கள் துறை விடுதியின் சமையலற்களை பயன்படுத்தி வருவதாக அண்ணாமலை அவர்கள் அபாண்டமாக பொய் சொல்லியுள்ளார்.

  எங்கள் வீட்டு சமையலுக்கு இரு சமையலற்களை சம்பளத்திற்கு பணியில் அமர்த்தியுள்ளேன்.அவர் வெளியிட்டிருக்கும் பட்டியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை."என்று அவர் கூறியிருக்கிறார்.

  முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை நல்லாத்தான் துப்பறிகிறார்.