2026-ல் பாமக ஆட்சி:- அன்புமணி பேச்சு!

ஜி.கே.சேகரன்,
தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளும் 52 ஆண்டுகாலம் மாறி மாறி ஆட்சி செய்தனர் 2026 ஆம் ஆண்டு பாமக நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் இளைஞர்களும் பாமகவின் செயல் திட்டங்க்ள் கொள்கைகளை கிராமம் கிராமமாக மக்களிடம் சொல்ல வேண்டும் திருப்பத்தூர் மாவட்ட பாமக பொதுகுழுவில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம்,திருப்பத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் நடந்தது.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா,பாமக மாநில துணைதலைவர் பொன்னுசாமி,பாமக மகளிரணி மாநில தலைவி நிர்மலா,மற்றும் நிர்வாகிகள் கிருபாகரன்,குட்டிமணிஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் , அன்புமணிராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சி அமைக்கும்.
இளைஞர்கள் ஒவ்வொரு கிராமங்களில் துடிப்புடன் இருக்கின்றனர்.
ஆனால் முறையாக பாமகவின் திட்டங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உறுதியாக 2026 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி நடக்கும்,
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்சணைகளையும் அதற்கான தீர்வுகளையும் பாமக தான் சொல்கிறது, 52 ஆண்டுகள் இரண்டு திராவிட கட்சிகள் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி அமைத்தது திமுக துவங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது அதிமுகவும் குறுகிய காலத்தில் ஆட்சிக்கு வந்தது.
ஆனால் பாமக 32 ஆண்டுகாலமாக பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, கட்சியில் நிறைய மூத்த நிர்வாகிகள் இருக்கிறார்கள் பாமகவின் கொள்கைகளையும் திட்டங்களையும் கிராமம் கிராமமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென பேசினார்.