எஸ்.ஐ.சஸ்பெண்டு! அமைச்சர் உதயநிதி நிகழ்வில் பரபரப்பு!

ஜான்.மரிய ஜோசப்,
தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்த போது காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அலட்சியப்போக்காக செல்லில் பேசிக் கொண்டிருந்தார். அந்த காட்சிகள் வெளியான நிலையில் அவர் எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
கடந்த 28ம் தேதி நாமக்கல்லில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, நாமக்கல்லை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் சேரில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
பொறுமையாக போனில் பேசி முடித்துவிட்டு தேசிய கீதம் முடிவடையும் தருவாயில் எழுந்து நின்றார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது.
இந்த விவகாரம் உயர் போலிஸ் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றது. அதன் பேரில் உதவி ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார்.