இறுதி யாத்திரையில் இசைக்குயில்! பிரதமர் மோடி அஞ்சலி!நாடு முழுவதும் 2 நாட்களுக்கு அரசு துக்கம்!

ஜார்ஜ் ரவி,
இறுதி யாத்திரை மேற்கொண்ட இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு ¢ பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
ஆகவே இந்தியா முழுவதும் இந்த 2 நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
இந்தியாவின் 'நைட்டிங்கேல்' என்று புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்வர் இந்தி மற்றும் தென் மாநில மொழி பாடகியான லதா மங்கேஷ்கர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பண்டிட் தீரநாத் மங்கேஷ்கருக்கும், செவந்தி தம்பதிக்கு பிறந்தார்.
லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிகல் பாடகர் மற்றும் நாடக கலைஞராக இருந்தார். இதனால் தன்னுடைய 4-வது வயதிலேயே தந்தையிடம் இசை பயில தொடங்கினார்.
பின்னர் புகழ்பெற்ற அமான் அலிகான் சாகிப் மற்றும் அமநாத்கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.
1942-ம் ஆண்டு சினிமா துறையில் பாடத் தொடங்கிய அவர் முதல் முதலாக 'கிதி ஹசால்' என்ற மராத்திய பாடலை பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்துவிடவே குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது.
அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் 'மஜ்பூர்' என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். இது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வந்த 'மகால், அந்தாஸ், பர்சாத், துலாரி' போன்ற படங்கள் பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது.
அனில் பிஸ்வாஸ், ஷங்கர், ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி.பர்மன், ராம்சந்திரா, ஹேமந்த் குமார், சலீம் சவுத்ரி, கயாம் ரவி, ரஜ்ஜத் உசைன், ரோஷன் கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் ஜேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், உஷா கண்ணா ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனுமாலிக், ஆனந்த்மிலிந்த், ஷீவ்கரி, ராம்லட்சுமன், ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசை அமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களை பாடியுள்ளார்.
தமிழில் சத்யா படத்தில் வரும் 'வளையோசை கல கல' என்ற பாடல் பெரும் பெயரை பெற்றுத்தந்தது.
அதே போல் பிரபு நடிப்பில் ஆனந்த் படத்தில் பாடிய 'ஆராரோ... ஆராரோ...' என்ற பாடலும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தது.
லதா மங்கேஷ்கர் 70 ஆண்டுகள் அவர் இந்திய ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
1999-ம் ஆண்டு லதா மங்கேஷ்கர் டெல்லி மேல்சபை எம்.பி.யாகவும் பணிபுரிந்துள்ளார்.
அவர் 14- விருதுகளை பெற்றவர் ஆவார்.
1).1969 ஆம் ஆண்டு "பத்ம பூஷன் விருது" வழங்கப்பட்டது.
2).1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
3).1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக "கின்னஸ் புத்தகத்தில்" இடம் பிடித்தார்.
4).1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
5).1989 ஆம் ஆண்டு "தாதா சாஹேப் பால்கே விருது" வழங்கப்பட்டது.
6).1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது.
7).1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.
8).1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது.
9).1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது.
10).1999 ஆம் ஆண்டு "பத்ம விபூஷன் விருது" வழங்கப்பட்டது.
11).1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது.
12).2001 ஆம் ஆண்டு "நூர்ஜஹான் விருது" வழங்கப்பட்டது.
13).2001 ஆம் ஆண்டு "மகாராஷ்டிரா ரத்னா விருது" வழங்கப்பட்டது.
14).2001 ஆம் ஆண்டு "பாரத் ரத்னா விருது" வழங்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சுமார் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் லதா மங்கேஷ்கர் 06.02.2022 அன்று காலை சுமார் 8.30. மணிக்கு காலமானார். அவருக்கு வயது 92.
பின்னர் லதா மங்கேஷ்கரின் உடல் மாலை 6.30 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி மும்பை வந்தார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
மகாராஸ்டிர முதல்வர் உத்தவ்தாக்ரே அவரது மனைவி ராஷ்மா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.