அமெரிக்க அமைச்சரின் கோரிக்கையை ஏற்ற தாலிபான்கள்! வெளிநாட்டவர்களை விமானத்தில் அனுப்பிவைத்தது!

அமெரிக்க அமைச்சரின் கோரிக்கையை ஏற்ற தாலிபான்கள்! வெளிநாட்டவர்களை விமானத்தில் அனுப்பிவைத்தது!
அமெரிக்க அமைச்சரின் கோரிக்கையை ஏற்ற தாலிபான்கள்! வெளிநாட்டவர்களை விமானத்தில் அனுப்பிவைத்தது!
அமெரிக்க அமைச்சரின் கோரிக்கையை ஏற்ற தாலிபான்கள்! வெளிநாட்டவர்களை விமானத்தில் அனுப்பிவைத்தது!

ம.பா.கெஜராஜ்,

 ஆப்கானிஸ்தானை, தாலிபான்கள் கைபற்றிய பின்னர் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியது.

 இந்த காலகட்டத்தில் வெளிநாட்டவர் மட்டுமின்றி ஆப்கானியர்களும் சொந்தநாட்டிலிருந்து நடையை கட்டினர்.

 எல்லாமே முடிந்தாகிவிட்டது என்கிற சூழலில் தற்போது தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தின் வழியாக முதல் முறையாக வெளிநாட்டுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 அதாவது கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு இந்தப் பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

 இதில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த113 பேர் பயணித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மேலும்  கனடாவைச் சேர்ந்த 43 பேரும், நெதர்லாந்தைச் சேர்ந்த 13 பேரும் மீட்கப்பட்டிருப்பதாக அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

  கத்தாருக்குச் சமீபத்தில் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கென், ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்பதற்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.  கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, 1.24 லட்சம் பேர் அங்கிருந்து விமானங்கள் மூலமாக அழைத்து வரப்பட்டனர். வெளியேறுவதற்கான கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி முடிந்த பிறகும் பலர் அங்கு சிக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.