சிறுமிகளை வைத்து மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்.... 40பேர் மீது வழக்கு..!!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் கடை போட்டிருப்பவர்களில் சிலர், அதன் வாயிலாக விபச்சார தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு மசாஜ் சென்டரில் சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட 40 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில், உருளையன்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த வாரம் பாலியல் தொழில் நடைபெற்றதாக மசாஜ் சென்டரை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தபட்ட 10 பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு 17 வயது தான் ஆகிறது.
அவரிடம் போலிசார் விசாரணை நடத்திய போது அவரிடம் 40 பேர் வரை பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டதாக விவரங்களை சொல்லியிருக்கிறார்.
அதனை தொடர்ந்தே உருளையான்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 40 பேரின் பட்டியலை தயாரித்து வருகிறார்கள்.
குறிப்பு:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படும் மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்கள் போன்றவற்றை போலிசார் கண்காணித்தால் நலம்,,.