வீட்டுக்குள் கஞ்சா வளர்த்த பீகாரி கைது!

ஜெ.அருண் ஹென்றிக்ஸ்,
கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபரை கைது செய்து கோவை மாவட்ட காவல் துறையினர் அதிரடி காட்டியிருக்கிறார்கள்.
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் கோவில்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சொரியம் பாளையம், (ஸ்ரீ பேக்கரி அருகில்) விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சா செடி வளர்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரிகா கேவட் என்பவரது மகன் பின்டு கேவட் (25) என்பவரிடமிருந்து இரண்டு கிலோ எடையுள்ள 4 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.