வேளாங்கண்ணியில் வாடகை பாக்கி செலுத்தாத 16 கடைகளுக்கு சீல்!

வேளாங்கண்ணியில் வாடகை பாக்கி செலுத்தாத 16 கடைகளுக்கு சீல்!

 ஜெ.அருண் ஹென்றிக்ஸ்,

   வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு வாடகை நிலுவையில் வைத்துள்ள 16 கடைகளுக்கு சீல் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

   நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேரூராட்சியில் உட்பட்ட பகுதிகளில் 100- க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இதில் 16 வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

  வேளாங்கண்ணி நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் பொண்ணுசாமி தலைமையில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளில் நோட்டீஸ் ஒட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

   ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பு வாடகை செலுத்த கோரி கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

   பேருந்து நிலையம்  அருகில் உள்ள உணவகம், மீன்கடை, காய்கறி கடை, இறைச்சி கடை, பல்பொருள் அங்காடியில் உள்ள ஏழு கடைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

  தொடர்ந்து பூக்காரதெருவில் உள்ள மளிகை கடை உள்ளிட்ட 16 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதில் வேளாங்கண்ணி ஆய்வாளர் ஆனந்தராஜ் வருவாய் அலுவலர்  உள்ளிட்டோர் கடைகளுக்கு சீல் வைத்தனர் வேளாங்கண்ணியில் ஒரே நேரத்தில் 16 கடைகளுக்கு சீல் வைத்த சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தியது.

  இருப்பினும் கடை உரிமைதாரர்கள் வாடகை செலுத்த முன்வரவில்லை.