ராணுவ வீரர் கனவு வாலிபர்கள் மறியல் செய்ய முயற்சி!

ராணுவ வீரர் கனவு வாலிபர்கள் மறியல் செய்ய முயற்சி!

கு.அசோக்,

வேலூரில் ராணுவ உடற்தகுதி தேர்வில் தேர்வாண இளைஞர்கள் எழுத்து தேர்வு நடத்த கோரி சாலைமறியல் செய்ய கூடியதால் பரபரப்பு - ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணி என்பதையும் ரத்து செய்ய கோரிக்கை

 வேலூர் மாவட்டம்,வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் வேலூர்,திருவண்ணாமலை,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென குவிந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.

  கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்காக ஆட்களை சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்ற உடற் தகுதி தேர்வில் இவர்கள் தேர்வானார்கள்.

   கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் கொரோனாவை காரணம் காட்டி எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை.

  இதனால் ராணுவத்திற்கு செல்ல ஆர்வமுள்ள இவர்கள் உடனடியாக எழுத்து தேர்வை நடத்த கோரியும் மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணி என்பதை ரத்து செய்ய கோரி மறியல் செய்ய முயன்றனர்.

   ஆனால் அவர்களை வேலூர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க அறிவுறுத்தி திருப்பி அனுப்பினார்கள் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.