நரிக்குறவர் களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்:- மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் உள்ள நரிக்குறவர்கள் கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா கலந்துகொண்டு நரிக்குறவர் இன மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த முகாமில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.