ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது போலீசில் புகார்!

ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது போலீசில் புகார்!

   ஜெ.ஸ்ரீதர்,

    சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.  முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.

 தமிழ்தாய் வாழ்த்து இசைத்த போது,  சில அலுவலர்கள் இருக்கையிலேயே அமர்ந்திருந்தனர்.

   இதை பத்திரிகையாளர் ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்., ' தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின்போது ஏன் எழுந்து நிற்கவில்லை' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அலுவலர்கள், 'தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இதுதொடர்பாக கோர்ட்டே உத்தரவு வழங்கி இருக்கிறது' என்று கூறினார்.

  'தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படும் போது அனைவரும் கட்டாயம் எழுந்திருக்க வேண்டும்' என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது' என்று அலுவலர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

 வங்கி அலுவலர்களின் இந்த தவறான செயலுக்கு பலர்கண்டனம் தெரிவித்திருந்தனர்.

 இந்நிலையில்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் ஆன்லைன் வாயிலாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

  அந்த புகார் மனுவில், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க குறிப்பிடப்பட்டுள்ளது.

   இந்த பிரச்சனையை தமிழக வாழ்வுரிமை கட்சி கையில் எடுத்துள்ளது. 

அப்படியிருக்க அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

   இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்தது தொடர்பாக, கவிஞர்                 அதே போல் ஆண்டாள் புகழ் வைரமுத்து டுவிட்டர் வாயிலாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.