சென்னையில் நண்பர்களை கொலை செய்த வடமாநில வெறியர்கள்!

சென்னையில் நண்பர்களை கொலை செய்த வடமாநில வெறியர்கள்!

ம.பா.கெஜராஜ்,

  சென்னை டிராவால்ஸ் நடத்திவரும் நண்பர்களை வடமாநில வெறியர்கள் கொலை செய்ததால் லாரி யார்டை பொதுமக்கள் களேபரம் செய்துள்ளனர்.

 இந்த கொலை சம்பவம் குறித்த விவரம் வருமாறு,

  சென்னை மாதவரம், மஞ்சம்பாக்கத்தில் இருந்து வடபெரும்பாக்கம் வழியாக புழல், செங்குன்றம் பகுதிகளுக்கு செல்லும் மாதவரம் நெடுஞ்சாலையில் லாரி பார்க்கிங் யார்டு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜேஸ் என்பவர் நடத்தி வருகிறார்.

 அங்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்களான கமல் என்ற கமலக்கண்ணன், குமரன், நவீன் ஆகியோர் நேற்று இரவு 7.30 மணி அளவில் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தனர்.

 அப்போது அவர்கள் அங்கிருந்த வடமாநில லாரி டிரைவர் மற்றும் கிளீனரிடம் 2 பேரும் சப்பாத்தி இருக்கிறதா என கேட்டதால்,  வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கமல், குமரன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 அப்போது ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை எடுத்துக் கொண்டு அதனை வேகமாக பின்னோக்கி   ஓட்டிச் சென்ற அவர் கமல், குமரன், நவீன் ஆகியோர் மீது லாரியை ஏற்றினார். இதில் இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள். நவீன் படுகாயம் அடைந்தார். 

  கொலை செய்த லாரி டிரைவரும் கிளீனரும் தலைமறைவானாகள்.

  கொலையான கமல், குமரன் இருவருமே இளம் வயதை சேர்ந்தவர்கள். கமலுக்கு 36 வயதும், குமரனுக்கு 34 வயதும் ஆகிறது. இருவருக்கும் திருமணமாகி விட்டது. 2 குழந்தைகளும் உள்ளனர்.

  காயத்துடன் உயிர் தப்பிய நவீனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் லாரி யார்டுக்கு திரண்டு சென்றனர். அவர்கள் ஆத்திரத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த  லாரிகளின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

 மேலும் யார்டை தீவைக்க முயன்றனர்.  இதனால் அங்கு பதட்டமும் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த செங்குன்றம் போலீசார் கோபத்திலிருந்த மக்களை சமாதானப்படுத்த முயன்றனர். 

   ஆவடி போலீஸ் துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர்கள் முருகேசன், தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கொடிராஜ் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக  போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கமல், குமரன் இருவர் மீதும் லாரியை ஏற்றி அவர்களது உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டிரைவர் கண்ணையாலால்சிங், கிளீனர் கிரீஸ்குமார் என்பது தெரிய வந்தது.

 பக்கத்து ஷெட்டில் பதுங்கியிருந்த மேர்படி கொலை செய்த லாரிடிரைவரையும், கிளினரையும் போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

இறப்பிலும் ஒன்றாக இருந்த நண்பர்கள்.

 கொலையான கமல், குமரன் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்துதனர். ஒன்றாக ஒரே பள்ளியிலேயே படித்துள்ளனர். இருவரும் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தனர். கார்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்த இருவரும் ஒரே நேரத்தில் கொலையுண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 மேற்படி வடபெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து  பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை பற்றிய கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர், கிளீனர் இருவரும் சேர்ந்து சென்னை நண்பர்களை கொலை செய்திருப்பது பேரதிர்ச்சிதான்.