அய்யோ உன்னை என்னம்மா செய்தாங்க?எப்படிம்மா இறந்தாய்! மாணவி ஸ்ரீமதியின் தாய் கதறல்!!

அய்யோ உன்னை என்னம்மா செய்தாங்க?எப்படிம்மா இறந்தாய்! மாணவி ஸ்ரீமதியின் தாய் கதறல்!!

ம.பா.கெஜராஜ்,

 கடந்த 13 ஆம் தேதி  ஸ்ரீமதி என்கிற மாணவி பள்ளிக்கூட வளாகத்தில் உயிரிழந்தார். இதனால் மாணவியின் பெற்றோர்க்கு ஏற்பட்ட சந்தேகம், கலவரம், நீதிமன்ற உத்தரவை போன்றவையை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

   பின்னர் அம் மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.

 மாணவியின் உடலைப் பார்த்து அவரது தாய் செல்வி, அய்யோ உன்னை என்னம்மா செய்தாங்க?எப்படிம்மா இறந்தாய் என்று கதறி துடித்து அழுதார். பார்ப்போரின் நெஞ்ச்சை அந்த குரல் பதறவைத்தது.

 கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்ட போது, ஆம்புலன்ஸ் வழியில் விபத்தில் சிக்கியது. அதாவது கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம், அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, திருச்சி பைபாஸ் சாலையில் வேப்பூரில் இருந்து 10 கிமீ தொலைவில் மாணவியின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சிறிய விபத்துக்குள்ளானது.

   ஆம்புலன்ஸ் மற்றும் அதன் துணை வாகனம் இரண்டும் கன்டெய்னர் லாரியுடன் மோதியது. இதில் ஆம்புலன்சின் முன்பகுதிய சேதமடைந்தது. இந்த விபத்தை அடுத்து, ஆம்புலன்ஸ் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

 இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.

   மேலும் ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர் சி.வி.சண்முகம், எம்எல்ஏ உள்ளிட்டோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  மாணவியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில், நண்பகலிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. போலீசாரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் சாலையெங்கும் நின்று கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை கொடுத்தனர்.

. பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்ய ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவியின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், மகள் ஸ்ரீமதிக்கு தந்தை இறுதி சடங்குகளை செய்தார். பின்னர், மாணவியின் உடல் அவரின் பாடப்புத்தகங்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இறுதி சடங்குக்கு வெளியூர் நபர்கள் வரக்கூடாது என தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சுமார் 700 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.