நான்கு நாட்களே ஆன கழிவுநீர் கால்வாய்கள் போனது! சூப்பர் காண்டிராக்டர் ஓட்டம்!!

கு.அசோக்,
ஆம்பூரில் கட்டி முடிக்கப்பட்டு நான்கு நாட்களே ஆன கழிவுநீர் கால்வாய்கள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு பகுதியில்ரூ. 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கால்வாய் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று திடீரென ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் சாலை அமைக்கும் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக பகுதி மக்கள் வீடுகளுக்குள் சென்றுவர முடியாமல் அவதி உற்று வந்த நிலையில் தற்போது புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்களும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் வீடுகளுக்குள் செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தற்போது பெய்த சாதாரண கனமழைக்கு தாங்காத அளவில் தரமற்ற முறையில் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்படியிருக்க இதற்கு பதில் சொல்ல வேண்டிய காண்டிராக்கடர் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது