மாணவர்கள் மத்தியில் ஜாதி மோதல்கள்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
மாணவர்கள் மத்தியில் ஜாதி மோதல்கள் உருவெடுத்து வருகிறது.
இது தமக்கு வருத்தம் அளிக்கிறது என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருத்தப்பட்டிருக்கிறார்.
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் ஜாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்.
முன்பு தென்மாவட்டங்களில் இதைப்போன்ற ஜாதி மோதல்கள் இருந்து வந்தது. படிப்பறிவு அதிகரித்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. திருநெல்வேலியில் ஜாதி கயிறு கட்டியதில் ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது.
அனைவருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் என்று கூறினார்.