சிறுமி கூட்டு பலாத்காரம்:-ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மகன்,தொடர்பு!!

சிறுமி கூட்டு பலாத்காரம்:-ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மகன்,தொடர்பு!!

  வித்யாசாகர்,

 ஐதராபாத்தில் சொகுசு காரில், சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மகன்,மாநில சிறுபான்மை வாரிய தலைவரின் மகன் உள்ளிட்ட 5 சிறார்களுக்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றின விவரம் வருமாறு,

   ஜூன் மாதம் 1 ம் தேதி ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேசன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சொகுசு காரில் சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

   போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து கூட்டு பலாத்காரம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ., மகன் மற்றும் சிறுபான்மை வாரியத்தின் மகன் உள்ளிட்ட 5 பேருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை தான் தற்போதைக்கு அடையாளம் காட்ட முடிந்தது. அந்த நபரும் சிறார் என்பதால் அவனுடைய கூட்டாளிகள் அவன் ஒத்த வயதுடையவர்கள் என்று விசாரித்ததில் அரசியல்வாதி குடும்ப பிள்ளைகள் சிக்கியிருக்கிறார்கள்